ஒற்றை பனைமரநிழலில்
ஓராயிரம் கனவுகளுடன்
நித்தம் பசியாற
நீளும் கைகள்
விழியில் எதிர்பார்ப்புடன்
விடியலை தரவரும்
ரட்சகனுக்காய் காத்திருக்கும்
எத்தனையோ பத்தாண்டு
ஏமாற்றிப் போனாலும்
இந்தப் பத்தாண்டு
இன்பத்தை தருமென்று
நம்பிக்கை நாற்றுக்களை நட்டுவைப்போம்
இலவசப் புயல் அடிக்காமல்
ஊழல் வெள்ளம் சிதைக்காமல்
பயிர் வளர வழிசெய்வோம்
பொழுதெல்லாம் நம் செல்வம்
அந்நியர்
கொள்ளைகொண்டு போகாமல்
கொள்கை செய்வோம்
நாளை வரும் காலம்
நமக்காக மலருமென்று
பூரிப்போம் புத்தாண்டில்
இளசை கிருஷ்ணமூர்த்தி
Monday, January 3, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment