Sunday, January 23, 2011
Monday, January 3, 2011
ஒற்றை பனைமரநிழலில்
ஓராயிரம் கனவுகளுடன்
நித்தம் பசியாற
நீளும் கைகள்
விழியில் எதிர்பார்ப்புடன்
விடியலை தரவரும்
ரட்சகனுக்காய் காத்திருக்கும்
எத்தனையோ பத்தாண்டு
ஏமாற்றிப் போனாலும்
இந்தப் பத்தாண்டு
இன்பத்தை தருமென்று
நம்பிக்கை நாற்றுக்களை நட்டுவைப்போம்
இலவசப் புயல் அடிக்காமல்
ஊழல் வெள்ளம் சிதைக்காமல்
பயிர் வளர வழிசெய்வோம்
பொழுதெல்லாம் நம் செல்வம்
அந்நியர்
கொள்ளைகொண்டு போகாமல்
கொள்கை செய்வோம்
நாளை வரும் காலம்
நமக்காக மலருமென்று
பூரிப்போம் புத்தாண்டில்
இளசை கிருஷ்ணமூர்த்தி
Sunday, January 2, 2011
வாசலுக்கு வருக
வசந்தப்ப்ரியனின் இதய வாசல்
வசந்தாவின் புன்னகை வாசல்
கவிஞர்களின் கற்பனைக்கு
கைவிரிக்கும் அரண்மனை வாசல்
Subscribe to:
Posts (Atom)

