Sunday, January 23, 2011

அழைப்பிதழ்




Monday, January 3, 2011

ஒற்றை பனைமரநிழலில்
ஓராயிரம் கனவுகளுடன்
நித்தம் பசியாற
நீளும் கைகள்
விழியில் எதிர்பார்ப்புடன்
விடியலை தரவரும்
ரட்சகனுக்காய் காத்திருக்கும்

எத்தனையோ பத்தாண்டு
ஏமாற்றிப்  போனாலும்
இந்தப் பத்தாண்டு
இன்பத்தை தருமென்று
நம்பிக்கை நாற்றுக்களை நட்டுவைப்போம்

இலவசப் புயல் அடிக்காமல்
ஊழல் வெள்ளம் சிதைக்காமல்
பயிர் வளர வழிசெய்வோம்

பொழுதெல்லாம் நம் செல்வம்
அந்நியர்
கொள்ளைகொண்டு போகாமல்
கொள்கை செய்வோம்

நாளை வரும் காலம்
நமக்காக மலருமென்று
பூரிப்போம் புத்தாண்டில்

இளசை கிருஷ்ணமூர்த்தி

Sunday, January 2, 2011

வாசலுக்கு வருக


கவிதைகளின் வசந்த வாசல்
வசந்தப்ப்ரியனின் இதய வாசல்
வசந்தாவின் புன்னகை வாசல்
கவிஞர்களின் கற்பனைக்கு
கைவிரிக்கும் அரண்மனை வாசல்