Friday, March 11, 2011

செல்வன் மிருதுன் மணிகண்ட பிரபு


 வாழும் வாழ்வே வரலாறு 

கல்வி நமக்கு கண்ணாகும் 
கற்பவை அனைத்தும் பொன்னாகும் 
கற்றவர் வழியில் நடந்தால் 
பெற்றவர் மனமே நலமாகும் : 

மண்ணில் தானே போன்னுமிருக்கு !
விண்ணை தொடும் ஆற்றல் நம்மிலிருக்கு! 
பொன்னும் பொருளும் பெருமை தரும் 
பொறுமை நமக்கு புகழை தரும் 

அன்னைக்கு உண்டு மன்னிக்கும் மனம் ,
தமிழ் சொல்லுக்கு உண்டு இனிக்கும் குணம் ,
தட்டி கேட்கின்ற  உரிமை வேண்டும் 
மூத்தோரை மதிக்கவும் வேண்டும்

தேடலிருந்தால் தெழிவு வரும் , 
திறமை இருந்தால் உலகே வரும் , 
இயக்கம் அனைத்தும் நாமானால் 
இனிக்கும் வாழ்வே நமக்காகும்! 

                        ஏன் ?

வங்க  கடல் வழிவிட்டு ஒதுங்கிவிடும் 
வனும் இறங்கி வந்து நம்மை வாழ்த்திவிடும்
நாம் வாழும் வாழ்வே வளமாகும் வரலாறு ஆகும் .